சனி, 26 நவம்பர், 2011

Poem for Our Heroes...Paaventhar Bharathithaasan (1891-1964)



Picturesque groves
Nurture you on this earth – how many
Comrades shredded
Blood on your roots!

Lotus blooming ponds
In those days you set in – Of our
Holiest comrades buried extinct
Shall I recite of it in this world!

Machine clusters that mill
Your first and finale – shall I recite
Laboring our villager’s toil
Didn’t it give rise to truth?

World that’s witnessing labors’ toil
Purging hunger plunders life – telling
Wealthy you are
Is this justice just? – Paaventhar Bharathithaasan’s (1891-1964) poem

சனி, 11 ஜூன், 2011

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருத்தரங்கம்


தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருத்தரங்கம்  <>பேராசிரியர் பால் நியூ மேன் உரை<>

தலைப்பு : ஐ.நா அறிக்கையின் சாரம்சங்கள்- சாதகமும், பாதகமும்

நாள்- 29 -5-2011

சென்னை

மே பதினேழு இயக்கம்








<>அய்யநாதன் உரை<>



<>தேவசகாயம் உரை<>



<>அருள் எழிலன் உரை<>



<>பிரியா தம்பி உரை<>



<>தேவசகாயம் உரை<>



<>ராஜேந்திர சோழன் உரை<>



<>டி.எஸ்.எஸ் மணி உரை<>



<>வழக்கறிஞர் பாண்டிமாதேவி உரை<>

<>திருமுருகன் உரை<>

ஞாயிறு, 15 மே, 2011

<>மிதிவெடியை நம்பி வாழும் விதவை பெண்கள்<>

இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது.


இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும் நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை என்கிறது ஆவணம்.

சனி, 14 மே, 2011

உலக தமிழா ஒன்றாய் எழுவாய் ..!


<>முள்ளி வாய்க்கால் புதிய பாடல்<>




ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

இலங்கை அரச படைகளின் உதவியோடு தமிழ்மக்கள் சீரழிப்பு

அல்சசீரா தொலைக்காட்சி இலங்கையில் அரச படைகளின் உதவியோடு சென்று கண்ட காட்சிகளை ஆவணத் தொகுப்பாக்கி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் எப்படிச் சீரழிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை இக் காணொளியைக் காண்பதன் மூலம் அறியலாம்.






வியாழன், 24 பிப்ரவரி, 2011

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னால் உள்ளவர் சுப்ரமணியசாமியா?

இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர்.

முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு.

இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது.

நாம் என்ன செய்தோம்? என்ன செய்ய முடிந்தது? .
இன்று வெற்றிகரமாக புலம்பெயர் தமிழர்களால் "போன மச்சான் திரும்பி வந்தான் புறமுதுகு காட்டி" என்று ராஜபக்ஷே திரும்பி வந்து விட்டார். தமிழ்நாட்டில் இலங்கை தூதராக பணியாற்றி அம்சா சென்னையில் கொடுத்த அல்வா பணியாரம் எதுவும் லண்டனில் செல்லுபடியாகவில்லை.

தமிழ்நாட்டில் இன உணர்வு என்றால் கிலோ என்ன விலை? அதுவும் எங்கேயாவது இலவசமாக கொடுத்துக் கொண்டுருக்கிறார்களா? என்று கேட்கும் தமிழர்களை ஒப்பிடும் போது ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்கள் உண்மையிலேயே மகத்தான தமிழர்கள் தான்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் கூடிய கூட்டம் என்பது எவராலும் முறைப்படுத்தப் படவில்லை. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாமல் அவரவர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் அன்றாட பணியை விட்டு வீதிக்கு வந்து அஹிம்சை முறையில் போராடி தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர். மொத்த ஐரோப்பிய அமெரிக்கா கனடா வாழ் ஈழத் தமிழர்கள் கூடியிருந்தால் நிச்சயம் ஒரு புதிய மறுமலர்ச்சி உருவாகியிருக்கக்கூடும். அதற்கான முதல் அடி இது என்பதாக எடுத்துக் கொள்வோம்.
இங்குள்ள ஊடகங்களின் அரசியல் சித்துவிளையாட்டுகளைப் போல இல்லாமல் போர்க்குற்றவாளியை வெளிக்காட்டிய மேலைநாட்டு ஊடகங்கள் மகத்தான பணியை செய்துள்ளன.
ராஜீவ் காந்தி படுகொலையால் தான் ஈழத்தமிழர்களுக்கு பிரச்சனை ஆரம்பம் ஆனது. இந்தியா இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தது. மறைமுகமாக அத்தனை தொழில் நுட்ப உதவிகளையையும் வழங்கியது என்று லாவணி போல் ஒப்பித்துக் கொண்டுருப்பவர்களுக்கு இந்த காணொளி பயன் உள்ளதாக இருக்கும்.
திருச்சி வேலுச்சாமி அவர்கள் கொடுத்துள்ள காணொளி பேட்டியான ஏழு பகுதிகளையையும் உங்களால் நேரம் ஒதுக்கி பார்க்க வாய்ப்பிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
இன உணர்வு என்பது பரஸ்பரம் வெளிக்காட்டிக் கொள்வது அல்லது உண்மையான விசயங்களை புரிந்து கொள்ள முயற்சிப்பது.
ஒன்றை புரிந்து கொள்ள முயற்சித்தாலே நம்மில் இருக்கும் இருட்டுப் பகுதிகள் இயல்பாகவே மாறிவிடும். நாம் மாற்றிக் கொள்ளாத வரைக்கும் இனத்தமிழன் என்பது மாறி இலவசத்தை மட்டும் எதிர்பார்க்கும் தமிழன் என்று வைத்துக் கொள்ளலாம்.

வரலாற்றில் எதிர்மறை நியாயங்கள் தேவையானது தானே?















<>அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ். <>



காங்கிரஸ். இந்தியாவை ஆளும் தேசிய கட்சி. மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட கட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த கட்சி தான் இந்தியாவை பகுதி பகுதியாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசி வருகிறது. இந்த விலை பேசும் படலத்தை அமரர்ராகி போன முன்னால் பிரதமரான ராஜிவ்காந்தியே தொடங்கிவைத்தார்.

நேரு கடைபிடித்த அணி சேரா கொள்கையை குப்பையில் தூக்கி எரிந்து அமெரிக்காவுடன் கை கோர்த்தார். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் வல்லரசாக வேண்டும் என்ற கனவில் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்க்குள் நுழைவதற்க்கான கதவை முதலில் அகலமாக திறந்தவர் பிரதமராகயிருந்த ராஜிவ்காந்தி.
தாராளமயமாக்கல் என்ற போர்வையில் அமெரிக்காவின் பன்னாட்டு கம்பெனிக்கு போபாலில் மக்கள் வாழும் பகுதியில் ஆபத்தான விஷவாயு அடங்கிய தொழிற்சாலைக்கு அனுமதி தந்து அது வெடித்து மிகப்பெரிய உயிர்பலி வாங்கியது. பணத்தை வாங்கிக்கொண்டு அதன் முதலாளிகளை தப்ப விட்டவர் ராஜிவ்காந்தி.
சர்வ வல்லமை பொருந்திய பிரதமர் பதவியில் இருக்கும் போதே சாதாரண அரசு ஊழியரைப்போல் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தார். ராணுவவீரர்களின் உயிர்களோடு நாட்டின் பாதுகாப்போடு விளையாட ஆரம்பித்தார். போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் கோடி கோடியாக கமிஷனாக வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் குவித்தார். ராஜிவ்காந்தி மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு வாசிசுகளால் புஷ்வானமாகி விட்டது.
கிராமங்களில் இன்று விவசாயம் அழிந்து போக காரணம் இதே ராஜிவ்காந்தி தான். விவசாயிகளை அமரர்களாக்க விதை விதைத்தார். புது முயற்சி என புது ரக விதை, மருந்துகளை இறக்குமதி செய்தார். அது இந்திய விவசாயத்தை அழிக்க ஆரம்பித்தது. அன்று ஆரம்பமான பிரச்சனை இன்று தினம் 10 விவசாயிகளாவது இறக்கும் அளவுக்கு வந்து நிற்க்கிறது.

உலகமே நம்மை ஆச்சர்யத்தோடு பார்ப்பதற்க்கு காரணம், நம் மக்களின் கலாச்சாரம் தான். ஆனால் இன்றைய நிலையில் அந்த கலாச்சாரத்தை உடைத்து யாரும் யாரோடும் என்ற நிலையை உருவாக்கியது இந்த ராஜிவ்காந்தி காலத்தில் தான்.
1990ல் நடந்த இந்திய நாடாளமன்றத்திற்க்கான பொது தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. செய்த பாவம் திண்றால் போகாது என்பதை போல ராஜிவ்காந்தி பதவியில் இருக்கும்போது ஈழ தமிழனுக்கு செய்த துரோகத்தால் மரணம் அவரை தேடி வந்தது. அவரின் மரணம் காங்கிரஸ் கட்சியை உயிர் பெற வைத்தது. ஊழல்வாதி ஜனநாயக நாட்டின் மகாத்மாவாகி விட்டார். ஆனால் அவர் விட்டு சென்ற பணிகளை அவரின் வாரிசுகள் இன்று தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
நூறு நாள் வேலை திட்டம். இந்திய கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் இந்தியா ஒளிர்க்கிறது என்ற பிரச்சாரம் செய்கிறது காங்கிரஸ். தமிழகத்தில் நடை பயணம் போகும் இளைஞர் காங்கிரஸ் மூச்சுக்கு முண்ணூறு முறை எங்கள் திட்டம் சிறந்த திட்டம் என கூப்பாடு போட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தால் ஏழைகளே செய்யும் வேலைக்கு கூலியை நிர்ணயிக்கிறார்களாம்.
பீகார், ஒரிசா, உத்திரபிரதேசம், ஆந்திராவில் போய் பாருங்கள் இந்த திட்டத்தின் லட்சணத்தை. அப்படி ஒரு திட்டம் இருப்பதே அந்த மக்களுக்கு தெரியவில்லை. வேலை செய்ததாக கணக்கு காட்டி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். வெளிப்புறத்திற்க்கு பார்த்தால் நல்ல சிறந்த திட்டமாக தோன்றும். ஆனால் உண்மையில் மக்களை சோம்பேறிகளகாக்க வந்த திட்டம், விவசாயத்தை முற்றிலும் அழிக்க வந்த திட்டம். அதில் 30 சதவிதம் வெற்றி பெற்று விட்டது காங்கிரஸ்.
தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களில் இந்த திட்டத்தால் விவசாயம் படு பாதாளத்துக்கு போய்விட்டது. இந்த திட்டத்தினை நிறுத்த வேண்டும் என கேட்டு விவசாய அமைப்புகள் குரல் கொடுத்தும் மத்தியரசு அசையவில்லை. காரணம் திட்டத்தின் மறைமுக வெற்றி. விவசாயத்தை அழித்து விட்டு என்ன செய்யபோகிறார்கள். தரிசுகளாக மாறும் நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்க தான் இந்த திட்டம். பன்னாட்டு கம்பெனிகளை வரவைத்து அவர்கள் மூலம் கோடி கோடியாய் கொள்ளயைடிக்கவும், ஏழை மக்களை இன்னும் ஏழைகளாக்கி குளிர்காயவுள்ளது.
அதை இன்று சோனியாகாந்தி தலைமையில் நடக்கிறது. நாளை இந்தியா இளைஞர்களின் கனவு நாயகன் என வர்ணிக்கப்படும் கொலம்பியா நாட்டு பெண்ணை மணக்க போகும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல்காந்தி தலைமையில் நடத்த எல்லா பூர்வாங்க வேலையும் நடக்கிறது. இப்படியெல்லாம் காங்கிரஸ்காரர்களால் நடக்கும் என யூகித்தே 50 ஆண்டுகளுக்கு முன், உலகமே கொண்டாடும் மகாத்மா காந்தி இந்தியா விடுதலை பெற்றதும், காங்கிரஸ் இயக்கம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது. இதை கலைத்து விட வேண்டும் என சொன்னார். அதை செய்திருந்தால் வரலாற்றின் பொன் எழுத்தில் காங்கிரஸ்சின் பெயர் நிலைத்திருக்கும்.

சொந்த சகோதரர்களை, தமிழனின் தொப்புள் கொடி உறவை அழித்த, இந்தியாவை விலை பேசும் தலைமை கொண்ட, ஊழல்வாதிகள் நிறைந்த காங்கிரஸ் பேரியக்கத்தை அழிக்க வேண்டும்.
Nandri: http://anbanavargal.blogspot.com/2010/11/blog-post.html

ராஜீவ்காந்தியின் கொலையும் சிபிஜ் ரகோத்தமன் புத்தகமும் காணொளிகள்
குறள் தொலைக்காட்சியின் திரு. திருச்சி. வேலுச்சாமியுடனான அண்மைய நேர்காணல்














புதன், 23 பிப்ரவரி, 2011

<>தேசத்தாயின் இறுதியஞ்சலி<>

தமிழ்த் தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.

பார்வதியம்மாளின் உடலத்திற்கு சிறீலங்கா இராணுவத்தினரினதும் புலனாய்வாளர்களினதும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் சரளமாக காட்டுமிராண்டிகள் நின்றபோதும், எம் தேசத்து உறவுகள் பலர் தேசத்தாயின் இறுதியஞ்சலியில் மனம்விட்டு கதறியழுது தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.



தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகள் நேற்று தீருவிலில் நடைபெற்றன. இறுதி நிகழ்வுகளில் பங்கெடுக்கும் மக்களை தடுக்கும் வகையிலான பல்வேறு கெடுபிடிகளை இராணுவமும் பொலிசாரும் இராணுவப் புலனாய்வினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
தீருவிலில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்விற்கு மருத்துவர் மயிலேறு பெருமாள் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உரையாற்றினர். அதன் போது தமிழீழ உணர்வாளர்களது உரைகளும் ஒலிபரப்பப்பட்டன. நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அச்சுறுத்தல்கள் காரணமாக மக்களின் பிரசன்னம் மிகக் குறைவாகக் காணப்பட்டிருந்தது.

தீருவில் நிகழ்வுகளை அடுத்து அம்மாளின் புகழுடல் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது வல்வெட்டித்துறையின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடிய மக்கள் இறுதி ஊர்வலத்தில் திரண்டனர்.

விற்பனை நிலையங்களைத் திறக்குமாறு அப்பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் முதல் புலனாய்வாளர்கள் வரை மிரட்டல் விடுத்த போதிலும் வர்த்தகர்கள் விற்பனை நிலையங்களைத் திறக்கவில்லை.

மக்களால் வீதிகளில் கட்டப்பட்ட கொடிகளை இராணுவத்தினர் அகற்றிய போது அதே கொடிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமே ஊர்வலத்தில் ஏந்திச் சென்றனர்.



வீடுகள் ஒவ்வொன்றிலும் இருந்து மக்கள் இறுதி வணக்கம் செலுத்தினர். புகழுடல் மயானத்தைச் சென்றடைந்ததும் இறுதிக் கிரியைகளை அடுத்து பார்வதி அம்மாளின் மைத்துனரான சங்கர நாராயணன் கொள்ளியிட்டார்.

சனி, 5 பிப்ரவரி, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்…? பேராசிரியர் சரசுவதி உரை

நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு, அதன் முதல் கருத்தரங்கம், நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற தலைப்பில் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சரஸ்வதி ஆற்றிய உரை…



 
இந்நிகழ்வில் தோழர் தியாகு ஆற்றிய உரை…




 
நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? – மருத்துவர் எழிலன்




நடிகரும் இயக்குநருமான தோழர் மணிவண்ணன் ஆற்றிய உரை…


 
 
பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை…
 

 
ஊடகவியலாளர் அய்யநாதன் ஆற்றிய உரை…





தோழர் தெ.தீ.சு.மணி ஆற்றிய உரை…



கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சி.ராசன் ஆற்றிய உரை…





தௌஹீத் ஜமாத் எசு.எ.பார்க்கர் ஆற்றிய உரை…


 
 
 
நன்றி : மீனகம்

சனி, 22 ஜனவரி, 2011

<>'ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம்' <>

மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தற்போது 'ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம்' என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் துயரங்களையும் தமிழர்கள் படும் துன்பங்களையும் காணொளி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் என்பதனையும்,சிங்களவர்களே அம்மண்ணில் வந்தேறிகள் என்பதனையும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.ஒவ்வொரு தமிழரும்,மனிதநேய உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம்.இதைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பரப்பவேண்டியது கடமையாகும்.

அந்த ஆவணப்படத்தின் காணொளி கீழே