செவ்வாய், 12 மே, 2009

வெள்ளி, 8 மே, 2009

<>கண்கள் நீர் வற்றிப்போகும்! நெஞ்சம் தீப்பபற்றி வேகும்<>

ஒவ்வொரு தமிழனும் இதை பார்க்கவேண்டும்.


தமிழனாய் பிறந்தவன் கண்களில் கண்ணீர் கட்டாயம் வரும்.
 



வேரோடு பிடுங்கி எறியப்பட்டாலும் சுடுகாட்டின் சுவாசம் வரும் வரை எங்கள் தாய்மண்ணின் வாசம் போகாது என்பதற்கு இது சான்று.

ஒவ்வொரு ஈழத்தமிழனும் புலம்பெயர்ந்து அகதியாய் வாழ்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் தாய்மண்ணின் மீதான உயிர்நேசம்,பற்று,விடுதலை வேட்கை அழிந்து போகாது.

அடிமனதில் ஆழமாய் அமிழ்ந்திருக்கும்"விடுதலை வேட்கை" ஒவ்வொரு ஈழத்தமிழனின் தனித்துவமான திறமையால் இன்று உலகின் மனட்சாட்சியை உலுக்குகின்றது.

ஆண்டுகள் பல சென்றாலும் சொந்த மண்ணின் சுதந்திரகாற்றுக்காய் ஏங்கும் ஒரு ஈழத்தமிழனின் இதயக்குமுறல் இது.

இப்பொதும் இந்தியாவில் ஏதிலாய் வாழும் பிறேம் கோபால் என்ற ஈழத்தமிழ்ச்சகோதரனின் உயிர் கரையும் உணர்வினை பாருங்கள்.

அவன் தன்னுள் இருக்கும் திறமையை தாயக விடுதலைக்காய் காணிக்கை ஆக்குகிறான்.

இன்று நம்மில் சிலர் தாயகத்தின் வலிகளை விற்று புலம்பெயர் நாடுகளில் அதன் "குடியுரிமையை" பெற்றுவிட்டு "அகதி" என்ற சொல்லை சொல்லவே வெட்கப்படுகிறோம்.

"அகதி" என்று சொல்லும் போது வலிக்காது.வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் இனிய இளையோரே....!!!!

உங்கள் ஒவ்வொருவரிடமும் உலகம் வியக்கும் திறமை ஒழிந்துகிடக்கிறது.

வெறி கொண்டு எழுந்து வாருங்கள்,எங்கள் திறமைகளை தாயகத்தின் விடுதலைக்கு காணிக்கையாக்குவோம்

எமக்கு வாழ்வு தந்து கல்லறையில் கண்மூடித்துயிலும் கண்மணிகளுக்கும்,உயிர்களை விதைத்து தமிழீழ மண்ணில் புதைந்து போன உறவுகளுக்கும் அர்ப்பணம் செய்வோம்...!!!

எழுந்து வா...!!! நிமிர்ந்து வா...!!! துணிந்து வா...!!!
--

"வந்த ஊரில் வாழ்வை தொலைப்பதை விட


சொந்த ஊரின் சுடலையில் எரிவதேமேல்.

-புதுவை இரத்தினதுரை"

அன்புடன்
உங்களில் ஒருவன்
தமிழ்ப்பொடியன்