ஞாயிறு, 14 ஜூன், 2009

ஈழத் தலைமகனே!

அடிமை” என்னும் விலங்கறுக்க வந்த தலைவன்


விடிவை நோக்கி பயணிக்க எழுந்த ஆதவன்


பொங்கும் கடல் தந்த ஈழத் தமிழ்மகன்- தமிழ்


வாழ வேண்டி தமிழன்னை ஈந்த தலைமகன்


ஈழ அன்னையாவருக்கும் மூத்த பிள்ளை


நாம் அழைப்போம் என்றும் எங்கள் அண்ணை”


தமிழர்க்கொரு இன்னல் என்றால் வேங்கையாவான்


தமிழீழப் பிள்ளைக்கெல்லாம் தமையனாவான்


ஈழமே மூச்சென்று என்றும் வாழ்பவன்!


எந்த இடர் வந்திடினும் சோர்ந்திடாதவன்


உறுதிகொண்ட மனங்கள் சேர்த்து படையமைத்தவன்


உலகம் வியந்துநிற்கும் வகையினிலே எமைச்சமைத்தவன்


கலங்கிடாத களத்திற்கே இவன் தளபதி! அண்ணன்


கட்டளைக்காய் காத்திருக்கும் புலிப்படையணி


விழியசைவு ஒன்று போதும் எதிரியோடுவான்! வானில்கூட


சிங்களத்தைப் பந்தாடுவான்! கடலும் கூட கைகட்டி


காத்து நிற்குமே! அண்ணன் கட்டளைக்குப் பணிந்து


அலையும் சுழன்றடிக்குமே! எதிரியைத் திணறடிக்குமே!


ஈழத்தின் காவலனாய் நிற்கும் செல்வனே! “கரிகாலன்”


என்னும் பெயர் கொண்ட எங்கள் அண்ணனே! ”


வாழ வேண்டும் தமிழைப் போல பல காலமே! வாழ்த்தி


நின்றோம் எங்கள் அண்ணா நீ வாழ்கவே!..நீ ஆளவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக